Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வரலாற்றினை திருத்தி எழுதிய யூதர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்த பாடம்

சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு நாட்டினத்தவர்களால் யூதர்கள்  சித்திரவதை செய்யப்பட்டு  கொல்லப்பட்டுள்ளனர் . “அசீரியா” என அழைக்கப்பட்ட ஈராக்கில் பிரிட்டன் குழுவொன்று செய்த ஆய்வில் , அடிமைகளாக இருந்த யூதர்களின் கைகளை வெட்டி , நாக்கை அறுத்து, கண்களை குருடாக்கி ஈராக் மன்னர்கள் தண்டனை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதேபோல் பாபிலோனியர்களாலும்,கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் காலங்காலமாக யூதர்கள் அடிமையாக்கப்பட்டு விரட்டப்பட்ட சம்பவங்கள் “யூத இனத்தவர்கள் வெறுக்கப்பட்டதைப்போல் வேறு எந்த இனத்தவரும் வெறுக்கப்படவில்லை “ என்பதை வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்துகின்றது .நமக்கெல்லாம் மேலோட்டமாக யூதர்களை அதிகம் வெறுத்தவர்கள் முஸ்லிம்கள் என தோன்றினாலும் , கிறித்தவர்களின் கடவுளான இயேசுவை சிலுவையில் அறையக்காரணமாக இருந்தவர்கள் யூதர்கள் எனும் பின்னணியில்  கிறிஸ்தவர்களே  யூதர்களை அதிகம் வெறுத்தனர் என்பதுதான் உண்மை . 

ரோம்சாம்ராஜ்யத்தில் யூதர்கள் எந்தவித உயர் பதவிகளையும் வகிக்க முடியாது, கிறித்தவர்களுக்கு எதிராக யூதர்கள் சாட்சி சொல்ல முடியாது போன்ற கட்டளைகளோடு, அக்காலத்தில் யூதர்கள் கிறித்தவ குழந்தைகளை  கொலைசெய்து அந்த இரத்தத்தினால் மதவழிபாடுகளை நடத்துவதாக காட்டுத்தீ போல பரவிய வதந்தியால் புறநகர்ப்பகுதிகளில் பதுங்கிவாழும் நிலை யூதர்களுக்கு உருவானது. பதினோராம் நூற்றாண்டளவில் ஐரோப்பா முழுவதுமே கிறித்தவ தேசமாக மாறிவிட்டிருந்தது . அந்த சமயத்தில் இயேசுவின் மரணத்திற்கு காரணம் யூதர்கள் என்கிற பிரச்சாரம் மேலோங்க; மெல்ல மெல்ல யூதர்கள்மீதான தாக்குதலும் அதிகமாயின. வாழ வழியற்று நின்ற  யூதர்களுக்கு அரபு முஸ்லிம்கள் வாழ இடம்கொடுத்தனர். கலீபாக்களின் உதவியால் யூதர்கள் சுயதொழில் மற்றும்   வாணிபம் செய்யவும், மத வழிபாடுகளை நிகழ்த்தவும் உரிமை பெற்றிருந்தனர். 

ஆனால் , கி .பி 8 ஆம் நூற்றாண்டளவில் உமர் கலீபாவாக பதவியேற்றபின்பு அனைத்தும் மாற ஆரம்பித்தது. முஸ்லிம்களின் வீடுகள் அளவிற்கு யூதர்கள் பெரிய வீடுகளை கட்டக்கூடாது, அதிக வரி செலுத்த வேண்டும் போன்ற கெடுபிடிகளால் இரண்டாம்தர மக்களாக யூதர்கள்  பார்க்கப்படும் நிலை உருவானது.  இந்த சூழலில்தான் வரலாற்றில் முக்கியமான ஒரு யுத்தமாக பார்க்கப்படும் சிலுவைப்போர் யூத இன அழிப்பினை  அரங்கேற்றியது.  இஸ்லாமியர்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் இந்த யுத்தத்தினை ஆரம்பித்திருந்தாலும் ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட சிலுவை வீரர்கள் முதலில் வெட்டி வீழ்த்தியது யூதர்களையே.

யூதர்களை கொன்று குவித்த அடால்ஃப் ஹிட்லர் புகைப்படவிபரம்: www.annefrank.org

இதன்பின் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்த யூதர்களை வெளியேற்றும் படலம் ஆரம்பித்தது .கி .பி 1200ல் இங்கிலாந்திலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர் , 1306 இல் யூதர்களை நாடுகடத்தியது பிரான்ஸ் , 1355 இல் ஸ்பெயினில் இருந்த பன்னிரெண்டாயிரம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது . யூதர்களுக்கு எதிரான (யூதர்கள் மிக மோசமானவர்கள், அவர்களது கல்விக்கூடங்கள் எரியூட்டப்படவேண்டும் போன்ற) கருத்துருவாக்கத்தினை  புரட்டஸ்தாந்து மதத்தின் முன்னோடியான மார்ட்டின் லூதர்கிங் வலுவாக பரப்பியமை புரட்டஸ்தாந்து மதத்தினரால் யூதர்கள் வெறுக்கப்பட காரணமாயின. இப்படி உலகெங்கிலும் யூதர்களுக்கு எதிராக திரண்டெழுந்தபோதுதான் இவையனைத்தையும் சேர்த்து அறுபது லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று குவிப்பதற்கு வித்திட்டது. 

இப்படியாக பல்வேறு நாடுகளாலும் துன்புறுத்தப்பட்ட யூதர்கள் தமக்கென ஒரு நாட்டினை கட்டியெழுப்புவது என்பதில் உறுதியானபோது, 1917ல் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் Balfour யூதர்களுக்கு தனிநாடு ஏற்படுத்தித் தரப்படும் என்கிற பிரகடனத்தை (Balfour Declaration) வெளியிட்டார். இதனடிப்படையில் 1948ஆம் ஆண்டு ஐநாவின் அங்கீகாரத்துடன் அரபு முஸ்லிம்களின் எதிர்ப்பையும்மீறி  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் எனும் நாடு உருவானது. இஸ்ரேல் உருவானபோது அங்கு யாரும் ஹிப்ரு மொழி பேசவில்லை. எனினும் அந்த மொழியினை மீட்டெடுக்கவேண்டிய தேவையிருந்ததனால் அனைத்து  யூதர்களுக்கும் ஹிப்ரு பயிற்றுவிக்கப்பட்டது. அதற்கு முன்னமே பலஸ்தீன  நிலசுவாந்தர்களிடமிருந்து வாங்கிய நிலங்களில் குடியேறிய யூதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் .

உலகின்  மிக பலம் வாய்ந்த உளவுத்துறையான இஸ்ரேலின் மொஸாட் அமைப்பு   புகைப்படவிபரம்: www.albawaba.com

என்னதான் யூதர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களுள் பெரும் பணக்காரர்களும் ஏராளமாய் இருந்தார்கள்.  இப்படி தங்களுடைய வரலாற்றினை திருத்தி எழுதுவதில் அக்கறை காட்டிய யூதர்கள் தம்மை சுற்றியிருக்கும் அரபு தேசங்களை கதறவிடுவதற்குப்பின்னால் இஸ்ரேலின் சக்திவாய்ந்த உளவுப்பிரிவான மொஸாட் இருந்தது.  இஸ்ரேலியர்கள் அறிவியலில் உலக நாடுகளுக்கே சவால்விடும் அசாத்திய திறமை படைத்தவர்களாக இருந்தனர் . மாசுபட்ட நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுற்பத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள், அதுமட்டுமின்றி சொட்டுநீர் பாசனமுறைமையை  கண்டுபிடித்தமை போன்ற பல்வேறுபட்ட புதுமைகளுக்கு இவர்கள் வித்திட்டார்கள். அடிப்படையில் பாலைவன நிலமாக இருந்த இஸ்ரேலின் நீர்பற்றாக்குறையினால் அந்த பாலைவன சூழலை  பயிர்சூழலுக்கு ஏற்றவகையில் மாற்றி விவசாயத்தில் தன்னிறைவடைந்தது இஸ்ரேல்.

 தொழில்நுட்பம், இசை , விஞ்ஞானம் , சினிமா என எந்த துறையினை எடுத்துக்கொண்டாலும் யூதர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசம்! அழகுசாதன பொருட்கள் , நாகரிக உடைகள், உணவுப்பொருட்கள், ஆயுதங்கள்  என அனைத்திலும் யூதர்களின் பங்கு அதிகம் . அமேரிக்கா ஐரோப்பா கண்டங்களில் செல்வாக்கான பதவிகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் யூதர்கள் . பல நாடுகளில் யூத நிறுவனங்கள் செழித்து வளர்ந்துள்ளன . ராணுவ தளவாடங்கள்,போர் விமானங்கள், நுணுக்கமான இயந்திர தயாரிப்புகள்  போன்றவற்றில் பல உலகநாடுகளுக்கு கடுமையான போட்டியாக உள்ளவர்கள் . எதிரிநாட்டு ஏவுகணைகளை வழியிலேயே தடுத்துத்தாக்கியழிக்கும்  ஏவுகணை தொழில்நுற்பம் இஸ்ரேலிடம் மட்டுமே உள்ளது . உலகில் வல்லமைகொண்ட விமானப்படையினையுடைய நாடுகளின் வரிசையில் அமேரிக்கா, ரஸ்யா, சீனா   ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில இருப்பது இஸ்ரேல் ஆகும்.

அந்தவகையில் இஸ்ரேலின் முக்கிய செல்வம் அவர்களது மூளையும் ,கடும் உழைப்பும்தான் . உலக நாடுகளில் இதுவரையில் 902 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது . அதில் 203 பேர் யூதர்கள். இதில் மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் 56,  இயந்திரவியலில் நோபல் பெற்றவர்கள் 55, வேதியியலில் 36, பொருளாதாரத்தில் 32, இலக்கியத்தில் 15 மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு 9 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல்மேதை ஆல்பட் ஐன்ஸ்டின், மூலதனத்தை உலகுக்கு வழங்கிய கம்யூனிச தந்தை கார்ல்மாக்ஸ், எழுத்தாளர்கள் Yizhar, savyon , Yehuda amichai amos oz, Natan Yonatan  , ஹாலிவுட் இயக்குனர்கள் ஸ்பீல் பெர்க் , Facebook  நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ,Google  நிறுவனர் லாரிபேஜ் , Dell கணினியை வழங்கிய Michael Dell மற்றும் New York times / U.S News/ World Report பத்திரிகைகளின் உரிமையாளர்கள் என அனைவருமே யூதர்கள் என்பதனால்தான் பன்னாட்டு வர்த்தகத்தில் அவர்கள் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுவதுண்டு. 

யூத இனத்தை சேர்ந்த Larry Page இவர் Google  நிறுவன நிறுவனர்களில் ஒருவராவர் புகைப்படவிபரம்: BBC.com

ஸ்டெம்செல் ஆராச்சியில் கைதேர்ந்தவர்கள். உலகின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ஆனால் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின்   நமது மூலையில் உள்ள திசுக்களை அழிக்கும், மரபணுக்களை கடுமையாக பாதிக்கும்  வல்லமை கொண்டவை என்பதால் அடுத்த தலைமுறையினரை பாதுகாப்பதற்காக இஸ்ரேலில் சிகரட் புகைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது . உலகில் கார்ட்டூன் துறையில் கொடிகட்டி பறப்பவர்கள்  யூதர்கள் ஆனால்ஒருபோதும் அவர்கள் தங்கள் குழந்தைகளை கார்ட்டூன் பார்க்க ஊக்கப்படுத்துவதில்லையாம்.                                  

இப்படியாக யூதர்கள்  இந்த உலகையே கட்டுப்படுத்த நினைப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களால்தான்   “இலுமினாட்டி” என்கிற சொற்பதம் யூதர்களுக்கானது என கூறப்படுவதுமுண்டு . எது எவ்வாறாயினும் “எந்த இனத்திடம் கடும் உழைப்பும் , அறிவும் , பணமும் இருக்கின்றதோ , அந்த இனம் தன்னுடைய வரலாற்றினை திருத்தி எழுதும்” என்பதனை நமக்கு யூதர்கள் இஸ்ரேலினூடாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்!

Related Articles