Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

போருக்குப்பின் யாழ் – பார்வை மற்றும் செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கான பாடசாலை

கிறிஸ்டியன் ஹட்டர்  (Christian Hutter)சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்பட மற்றும் காணொளிக் கலைஞர். இவர் இலங்கைக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் தான் கண்டுணர்ந்த அனுபவங்களை ஆவணப்படுத்தி வருபவர்

கடந்த வருடம் நான் மேற்கொண்ட ஆறு மாத இலங்கைப் பயணத்தில் யாழ்ப்பணத்தில் உள்ள பார்வை மற்றும் செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கான நஹ்பில்ட் (Nuffield) பாடசாலையைத் தரிசிக்கக் கிடைத்தது. அங்கு சென்ற சிலபொழுதுகளிலேயே அவர்களது அன்றாட செயற்பாடுகளில் நானும் ஒன்றிவிட்டேன். இருபது வருடங்களாக நடந்தேறிய கொடூர யுத்தத்தின் விளைவால் குண்டுதுளைத்த சுவர்களுக்கும், செல்லரித்த சுவடுகளுக்கும் நடுவே அவர்களது வாழ்வு எவ்வாறு நகர்கிறதென்பதை அறியும் ஆர்வத்திலேயே முதலில் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வடக்கின் ஊனமுற்ற பிள்ளைகளின் கல்வி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை திறம்படச் சித்தரிப்பதே எனது நோக்கு. இலங்கை முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு விருத்தி நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது. அவ்வாறான பதிவுகளைப் பகிர்ந்துகொள்வது சிறப்பெனக் கருதுகிறேன்.

ஆறு வயதுமுதல் இருபத்தாறு வயதுவரை உள்ள பல்வேறுபட்ட இன மத மொழி வேறுபாடுடைய மாணவர்கள் இங்கு ஒன்றாகக் கல்வி கற்கின்றனர்.

நூறுக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கேயே தங்கிக் கல்வி கற்கின்றனர். வார இறுதி நாட்களில் அல்லது விஷேட விடுமுறை தினங்களிலேயே இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்கின்றனர். வருமானம் குறைந்த பெற்றோர்களால் இவ்வாறான குழந்தைகளுக்கு ஏற்ற கல்வியை வழங்குவது சாத்தியம் குறைந்ததாகவே காணப்படும் நிலையில் அக்குழந்தைகளை இவ்வாறான பாடசாலைகளில் விடுகின்றனர். பொதுவாக இப்படியான குழந்தைகள் பிறக்கின்ற பொழுது அதனைப் பல பெற்றோர்கள் அவமானமாகவே கருதுகின்றனர். தங்கள் பிள்ளைகளை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தாமலேயே வைத்திருக்கின்றனர். இதன் காரணமாக பல குழந்தைகள் உரிய வயதில் தமக்குக் கிடைக்கவேண்டிய கல்வியை இழந்து நிற்பதோடு சில மாணவர்கள் பதினைந்து வயதைக் கடந்த நிலையிலேயே இப்பாடசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கல்வி மட்டுமல்லாது கலை மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும்கூட இம்மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் இப்பாடசாலை பெரும்பங்கை வகிக்கின்றது. அவ்வாறு கற்றல் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடும் நேரத்தையே அவர்கள்பற்றிய ஆவணப்படுத்தலில் பயன்படுத்துகிறேன்.

அவர்கள் என்னோடு தொடர்பாடிய விதமே என்னை வியப்பில் ஆழ்த்தியது. மொழிவேறுபாடு மட்டுமன்றி அங்குள்ள மாணவர்களில் சிலர் கேள்விப்புலனற்றவர்கள், கட்புலனற்றவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்கள். இத்தடைகளனைத்தையும் தாண்டி அவர்கள் என்னோடு தொடர்பாடினர். பெரும்பாலும் கேள்விகளைக் கரும்பலகையில் எழுதியே கருத்துப் பரிமாறிக்கொண்டோம். என்னைப்பற்றியும் எனது பின்னணி பற்றியும் அறிந்துகொள்வதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இத்தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் இங்கு கல்வி பயிலும் பிள்ளைகளையும் அவர்கள் வாழும் இச்சிறப்பான சூழலையும் தாங்கி நிற்கின்றன.

யுத்தத்தில் அழிவடைந்த சுவரொன்றுக்கு முன் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனையே இவ்வண்ணப் படம் சித்தரிக்கிறது. யுத்தம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வெடிகுண்டுகளாலும் செல்களாலும் நிலைகுலைந்துபோன வண்ணச் சுவரொன்றே இது. அச்சுவரின் கொடூரமான கதை, எதிர்காலம்பற்றிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கி நிற்கும் ஒரு இளம் மாணவனின் பின்னால் எழுந்து நிற்கின்றது.

ஏனைய அனைத்துப் புகைப்படங்களும் இம்மாணவர்கள் கல்விகற்கும், ஒருவருடன் ஒருவர் தொடர்பாடும், நண்பர்களுடன் நகைச்சுவைகளில் ஈடுபடும் மற்றும் பாடசாலை வளாகத்தில் உலவும் சந்தர்ப்பங்களைச் சுட்டி நிற்கின்றது.

யாழ் தீபகற்பத்தில் கிளர்ந்தெழுந்த யுத்தம் இப்பாடசாலையையும் விட்டுவைக்கவில்லை. பாடசாலையின் கட்டிடங்கள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகி சிதைவுண்ட நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு செவிப்புலனற்ற மாணவன் துப்பாக்கி ரவைகளினால் துளையுண்டு நிறம்மாறி நிற்கும் சுவரொன்றுக்குமுன்னே அமர்ந்திருப்பதையே இப்புகைப்படத்தில் காண்கிறீர்கள்.

யாழ் தீபகற்பத்தில் கிளர்ந்தெழுந்த யுத்தம் இப்பாடசாலையையும் விட்டுவைக்கவில்லை. பாடசாலையின் கட்டிடங்கள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகி சிதைவுண்ட நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு செவிப்புலனற்ற மாணவன் துப்பாக்கி ரவைகளினால் துளையுண்டு நிறம்மாறி நிற்கும் சுவரொன்றுக்குமுன்னே அமர்ந்திருப்பதையே இப்புகைப்படத்தில் காண்கிறீர்கள்.

 கேள்விப்புலனற்ற மாணவனொருவன் தனது கேள்விச்சாதனத்துடன் இருப்பதைப் படத்தில் காணலாம். மாணவர்களுக்கான கேள்விச் சாதனங்கள் இப்பாடசாலைக்கு அவ்வப்போது கிடைக்கும் நன்கொடைகளிலிருந்தே பெறப்படுகின்றன.

கேள்விப்புலனற்ற மாணவனொருவன் தனது கேள்விச்சாதனத்துடன் இருப்பதைப் படத்தில் காணலாம். மாணவர்களுக்கான கேள்விச் சாதனங்கள் இப்பாடசாலைக்கு அவ்வப்போது கிடைக்கும் நன்கொடைகளிலிருந்தே பெறப்படுகின்றன.

2003 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்பு பிஷப் துலீப் டி சிக்கேராவினால் இப்பாடசாலையைப் புனர்நிர்மாணம் செய்வதற்கென ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டது. மேலுள்ள புகைப்படத்தில் காட்டப்பட்ட அதே சுவரின்முன்னே வேறொரு சிறுவன் அமர்ந்திருப்பதைப் படம் காட்டுகிறது.

2003 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்பு பிஷப் துலீப் டி சிக்கேராவினால் இப்பாடசாலையைப் புனர்நிர்மாணம் செய்வதற்கென ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டது. மேலுள்ள புகைப்படத்தில் காட்டப்பட்ட அதே சுவரின்முன்னே வேறொரு சிறுவன் அமர்ந்திருப்பதைப் படம் காட்டுகிறது.

இங்குள்ள சில மாணவர்களில் பலர் யுத்தத்தின் காரணமாகவே உடலூனமுற்றிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடுகளினாலும் குண்டுவெடிப்புக்களாலும் தங்கள் பார்வை மற்றும் செவிப்புலன்களை இம்மாணவர்கள் இழந்துள்ளனர்.

இங்குள்ள சில மாணவர்களில் பலர் யுத்தத்தின் காரணமாகவே உடலூனமுற்றிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடுகளினாலும் குண்டுவெடிப்புக்களாலும் தங்கள் பார்வை மற்றும் செவிப்புலன்களை இம்மாணவர்கள் இழந்துள்ளனர்.

இது ஒரு கட்புலனற்ற மாணவனின் புகைப்படம். கட்புலனற்ற மாணவர்கள் தங்களது இரண்டாவது வயதிலிருந்தே இப்பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர். முதலில் பொருட்களைக் கையாண்டு தங்களைச் சூழ உள்ள பொருட்களை இனங்காணப் பழகுகின்றனர். அதன்பின்னர் பிரெய்லி முறையைக் கற்றுக்கொள்கின்றனர்.

இது ஒரு கட்புலனற்ற மாணவனின் புகைப்படம். கட்புலனற்ற மாணவர்கள் தங்களது இரண்டாவது வயதிலிருந்தே இப்பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர். முதலில் பொருட்களைக் கையாண்டு தங்களைச் சூழ உள்ள பொருட்களை இனங்காணப் பழகுகின்றனர். அதன்பின்னர் பிரெய்லி முறையைக் கற்றுக்கொள்கின்றனர்.

கட்புலனற்ற ஒரு சிறுமியின் புகைப்படம்

செவிப்புலனற்ற மாணவிகளிருவர் கரும்பலகையில் ஏதோ எழுதி விளையாடுகின்றனர்.

செவிப்புலனற்ற மாணவிகளிருவர் கரும்பலகையில் ஏதோ எழுதி விளையாடுகின்றனர்.

இடைவேளையின் பின்னர் ஒரு மாணவன் போடும் குட்டித் தூக்கம். 90 சதவீதமான மாணவர்கள் இப்பாடசாலையிலேயே தங்கிக் கல்விபயில்கின்றனர்.

இடைவேளையின் பின்னர் ஒரு மாணவன் போடும் குட்டித் தூக்கம். 90 சதவீதமான மாணவர்கள் இப்பாடசாலையிலேயே தங்கிக் கல்விபயில்கின்றனர்.

நண்பர்கள் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியை ரசித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள். ஆண் பெண் மாணவர்களை அண்ணளவாக சரிவிகிதத்தில் கொண்ட இப்பாடசாலையில் மொத்தமாக 180 மாணவர்கள் கல்விபயில்கின்றனர்

நண்பர்கள் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியை ரசித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள். ஆண் பெண் மாணவர்களை அண்ணளவாக சரிவிகிதத்தில் கொண்ட இப்பாடசாலையில் மொத்தமாக 180 மாணவர்கள் கல்விபயில்கின்றனர்

மாணவியொருத்தி பாடசாலை வளாகத்தில் உலவிவரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

மாணவியொருத்தி பாடசாலை வளாகத்தில் உலவிவரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

மொழிபெயர்ப்பு – Rakshana Sharifudeen

Related Articles