Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

தியாகராஜ பாகவதரின் அழியா நினைவுகள்

“வாழ்க்கைல எதுவும் நிரந்திரமில்லைங்குறத என்னோட அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு உங்க அன்பு மட்டும் போதும்.” 

– தியாகராஜ பாகவதர்

வெறும் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து பெரும் புகழ் சேர்த்துவிட முடியுமா? அதுவும் முதல் சூப்பர் ஸ்டார் என்ற முத்திரை பதித்துவிட முடியுமா? அதிலும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக திகழ முடியுமா? ஆம் முடியும் என்று அடித்துச்சொல்வதற்கு உதாரணமாக ஒருவரை குறிப்பிடச் சொன்னால் இந்தக் கலைஞர்தான் இருக்கிறார். அவர்தான் ‘எம்.கே.டி’ என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

காலத்தால் அழியாத பாடல்களையும், காவிய திரைப்படங்களையும் தந்த எம்.கே. தியாகராஜர் நட்சத்திரங்களுக்கெல்லாம் நட்சத்திரமாய் இருந்துள்ளார். திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்ட இவரின் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் சில இதோ.

நாடக துறையில் நுழைந்தார்….

இருபதுகளில் தொடக்கத்தில் தியாகராஜர்

தியாகராஜர் நடித்த முதல் நாடகம் ‘ஹரிச்சந்திரா’. இந்த நாடகத்தின் வெற்றி ஒரே இரவில் இவரை ஒரு குழந்தை நட்சத்திரமாக மாற்றியுள்ளது. 10 வயது நிரம்பிய இவரின் நடிப்பின் புகழ் திருச்சி மற்றும் இல்லாமல் பிற ஊர்களிலும் காட்டுத் தீ போல பரவியுள்ளது.

குரு தட்சணை வாங்கவில்லை

அந்தக் காலத்தின் புகழ்பெற்ற வயலின் வித்துவானான மதுரை பொண்ணு ஐயங்கார் தற்செயலாக ‘ஹரிச்சந்திரா’ காண நேர்ந்துள்ளது. நாடகத்தில் தியாகராஜர் லோஹிதாசன் வேடம் ஏற்று நடித்துள்ளார். இதன் போது கேள்வி ஞானத்தின் அடிப்படையில் பாடல்களை பாடிய தியாகராஜரின் திறமையை கண்டு வியந்துள்ளாராம். அந்த நொடியே அவரை தன் மாணவனாக ஏற்று கட்டணம் வாங்காமல் பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.

பாகவதர் பட்டம் பெற்றார்..

பாகவதர் பட்டம் பெற்ற பிறகு தியாகராஜர்

ஆறு வருடங்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு திருச்சியில் கமலா தெருவில் அமைந்துள்ள பெரிய காளியம்மன் கோவிலில் தியாகராஜரின் முதல் கர்நாடக இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய மதுரை பொண்ணு ஐயங்கர் விரும்பியுள்ளார். அதற்காக அப்போதைய மிகவும் பிரபலமான மிருதங்கம் வித்துவான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆச்சாரி அவர்களையும் புகழ்பெற்ற கஞ்சீரா வித்துவான் சீடரான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையையும் அணுகியுள்ளார். கச்சேரி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. ககச்சேரியின் இறுதியில் தட்சிணாமூர்த்தி பிள்ளை இதுபோன்ற ஒரு இனிமையான குரலில் ராகங்களை இவ்வளவு சிறப்பாகக் கையாண்டதை தான் இதுவரை கேட்டதில்லை என்றும் முருக பகவான் கர்நாடக இசை உலகிற்கு தியாகராஜரை பரிசளித்துள்ளதாக தனது உரையில் கூறியுள்ளார். அதே மேடையில் தியாகராஜருக்கு ‘பாகவதர்’ என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளார். அன்றுமுதல் திருச்சி தியாகராஜன் ‘தியாகராஜ பாகவதர்’ ஆனார்.

ஹீரோவாக களமிறங்கிய முதல் நாடகம்

பவளக்கொடி திரைப்படத்தில் தியாகராஜர் தோற்றம்

1926 ஆம் ஆண்டில் தியாகராஜ பாகவதர் ஹீரோவாக நடித்த முதல் மேடை நாடகம் பவளக்கொடி. இது திருச்சியின் கோல்டன் ராக் என்றழைக்கப்படும் பொன்மலையில் அரங்கேறியுள்ளது. கதாநாயகியாக டி.பி.ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். டி.பி.ராமகிருஷ்ணன் பின்னர் திருச்சியின் ஏ.ஐ.ஆரில் ஒரு கர்நாடக இசை வித்வான் ஆகியுள்ளார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்.டி.சுப்பலட்சுமி பாகவதருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த ஜோடி உடனடியாக வரலாற்றை உருவாக்கியுள்ளது. எம்.கே.டி மற்றும் எஸ்.டி.எஸ்ஸின் நாடக பேச்சு வயதில் அனைவரும் கவரப்பட்டுள்ளனர். தியாகராஜரின் புகழ் இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா மற்றும் சிங்கப்பூரிலும் கூட தமிழ் மக்களின் இதயங்களை சென்றடைந்துள்ளது.

பாகவதரின் நாடகம் ‘சிறப்பு நாடகம்’ ஆனது ஏன் ?

எம்.கே.டி தன்னை ஒருபோதும் எந்த நாடக குழுவினருடனும் அடையாளம் காட்டவில்லையாம். அவரது மனநிலை மற்றும் வசூலை பொறுத்து ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் இவரது நாடகங்கள் ‘சிறப்பு நாடகம்’ என்று அழைக்கப்பட்டுள்ளன. பாகவதரின் தினசரி ஊதியம் ரூ .50 ஆக உயர்ந்துள்ளது. இது அந்த நாட்களில் மிகப் பெரிய தொகையாகக் கருதப்பட்டுள்ளது. நாடகங்கள் இடைவேளையில்லாமல் பல நாட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது.

சினிமாவில் தடம் பதிக்கிறார் பாகவதர்

மேடை கலைஞராக எம்.கே.டி மிகவும் பிரபலமாக இருந்தபோதுதான் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை கிடைத்துள்ளது. இவரது மேடை நாடகமான பவளக்கொடி 1934 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பத்து ஆண்டுகள் அவருக்கு ஒரு திரைப்பட நட்சத்திரமாக நிகரற்ற பெயரையும் புகழையும் கொடுத்துள்ளது.

தியாகராஜரின் முதல் கிராமபோன் பதிவு!

1938 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘ராதே உனக்கு’ மற்றும் ‘ஞான கண்’ பாடல்கள் எம்.கே.டியின் குரலில் கிராமபோனில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல்கள். அதே ஆண்டில் அவர் ‘நவீனா சாரங்கதாரா’ படத்திலிருந்து ராக சுருதியில் சிவபெருமன் கிருபாய் ‘வழங்கினார். அதே ஆண்டில் அவர் ‘நவீனா சாரங்கதாரா’ திரைப்படத்திலிருந்து ‘சிவபெருமானின் கிருபை’ வழங்கியுள்ளார். ரதிபதிபிரியா, ராசாலி போன்ற அரிதான ராகங்களை சிறப்பாக கையாண்டுள்ளார் தியாகராஜர்.

ரதிபதிபிரியா, ராசாலி போன்ற அரிதான ராகங்களை சிறப்பாக கையாண்டுள்ளார் தியாகராஜர். அதுமட்டுமன்றி சாருகேசி ராகத்தை பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் இவர்தான். ‘மன்மத லீலை’ பாடலை கேட்ட பிறகு கச்சேரிகளில் சாருகேசி ராகம் மிகவும் சிறப்பு பெற்றுள்ளது. அப்போதிருந்து, பல திரைப்பட பாடல்கள் சாருகேசியில் இயற்றப்பட்டுள்ளன. அந்த ராகத்தில் அமைந்த பிரபலமான இரண்டு பாடல்கள் டி.எம்.எஸ்ஸின் ‘வசந்தமுல்லை’ மற்றும் எம்.எல்.வி.யின் ‘ஆடல் காணீரோ’ ஆகும்.  

தெய்வீக மானிடன் – தியாகராஜ பாகவதர்

அவரது முழுமலர்ச்சி காலத்தில் பாகவதரை ரசிகர்கள் ஒரு தெய்வீக மானிடனாக போற்றியுள்ளனர். அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த பட்டு உடைகள், காதிலிருந்து வைர குண்டலங்கள் மற்றும் அவரது சிகை அலங்காரம் என்பன தேவர்களை போன்றது என அவரது ரசிகர்களால் பேசப்பட்டுள்ளது.

தியாகராஜரின் விதம் விதமான பட்டுசட்டையும் அதற்கு பொருத்தமான சால்வையும் அணிந்திருக்கும் தியாகராஜர்

அவரது தங்கத் தட்டும் அந்த காலத்திலேயே மோட்டார் சைக்களில் அவர் சென்றதும், விலைக்கு வந்த புதிராக கார்களை வாங்கி பயணித்ததும் ரசிகர்கள் மத்தியில் அவரை ஒரு தேவனாகவே பார்க்கத்தூண்டியுள்ளது. அவர் கிட்டத்தட்ட திருச்சியின் இளவரசன் போலவே இருந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

தியாகராஜரின் கார், குதிரை மற்றும் மோட்டார் வண்டி

இதுபோக அவர் சொந்தமாக ஒரு குதிரையையும் வளர்த்து வந்துள்ளார். வெள்ளை நிறமான இது ஹரிதாஸ் என்ற இவரின் படத்தின் தொடக்க பாடலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜருக்கு திருச்சியில் மாளிகை போன்ற ஒரு வீடும், சென்னையில் காந்தி நகரில் ஒரு வீடும், தி நகர் மற்றும் புரசைவாக்கத்தில் ஒவ்வொரு வீடும் கட்டியுள்ளார். அவர் தனது சகோதரிகளின் திருமண நிகழ்வுகளை மிகுந்த ஆடம்பரமாகவும் கொண்டாட்டமாகவும் செய்துள்ளாராம்.

தியாகராஜரின் பாதம் தொட்ட மண்ணை அள்ளிக்கொண்ட காலம்

பாகவதரின் ரசிகர்கள் அவரது காலடி மண்ணை சேகரித்தும் அவர் கைகளால் தொட்ட இடங்களை முத்தமிட்டும் மகிழ்ந்துள்ளனராம். அவரின் புகையிரதத்தில் பயணிக்கும் போது அவரை பார்க்காது புகையிரத்தைத் போக விடாது தடுத்தும் நிறுத்தியுள்ளனராம்.

ஒரு முறை தியாகராஜர் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி காரில் பயணித்த போது புகையிரத கடவையில் வாகனத்தை நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது அந்த குறுகிய நேரத்தில் அங்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டம் அவரை ‘மன்மத லீலை’ பாடலை பாடுமாறு கேட்க எம்.கே.டி பாடலை பாடினாராம்.

திருச்சியில் தியாகராஜர் கட்டிய மாளிகை போன்ற அவரது வீடு

இன்னுமொரு நாள் அதே இடத்தில் காரை நிறுத்திய போது அருகில் நின்ற துவிச்சக்கர வண்டியில் ஒரு வழிப்போக்கன் இவரின் பாடல்களில் ஒன்றை பாடிக்கொண்டிருந்தானாம். அவனை எட்டி பார்த்த போது எம்.கே.டி.யைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த வழிப்போக்கன் உடனே அருகில் இருந்த கடைக்குச் சென்று ஒரு அந்த கால சோடா ஒன்றை வாங்கி வந்து கொடுத்துள்ளான். தியாகராஜரின் ஓட்டுநர் அவர் அதையெல்லாம் குடிக்க மாட்டார் என்று வழிப்போக்கனை திட்ட ஓட்டுனரை நிறுத்தி அவன் கையில் இருந்த சோடாவை வான்ஹகி பருகியுள்ளாராம். பாசத்தின் வெளிப்பாடு பானத்தை விடவும் மேலானது என அவரின் ஓட்டுனருக்கு புரியவைத்துள்ளார்.

பொதுவாக எம்.கே.டி இன் கச்சேரி என்றாலே கூட்டம் அலைமோதுமாம். கச்சேரி அரங்கு அதை சுற்றிய இடங்கள் என மொத்த இடமும் ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுமாம். மின்சார கம்பத்தில் கூட ஏறி நின்று பார்த்த சந்தர்ப்பங்களும் உண்டாம். சேலத்தில் இடம் பெற்ற ஒரு கச்சேரியின் போது மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கச்சேரி பார்த்த சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது. கச்சேரி முடிய விடயம் அறிந்து உடனே அச்சிறுவனை சென்று பார்த்து இரங்கல் தெரிவித்து அப்போது மிகப் பெரிய தொகையான 5000 ரூபாவை வழங்கியுள்ளார் பாகவதர்.

தியாகராஜர் ஒரு நிகழ்ச்சிக்காக தேவகோட்டைக்கு விஜயம் செய்த போது அவரை ரயில் நிலையத்தில் இருந்து ராஜாக்களுக்கான பல்லக்கு போயன்று வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக வண்டியில் நாதஸ்வரம் இசைக்க வரவேற்றுள்ளனர். சுமார் இரண்டு மைல் தூரம் வரை இவாறே சென்றுள்ளனராம்.

தியாகராஜர் புகையிரத்தில் பயணிக்கும் போதெல்லாம் ரயில்கள் 4 அல்லது 5 மணிநேரங்களுக்கு பின்னால்தான் இலக்கை சென்றடையுமாம். காரணம் ஒவ்வொரு இடைப்பட்ட நிலையங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அவரை பார்த்த பிறகே புகையிரத்தை எடுக்க விடுவார்களாம்.

பாகவதர் ஹேர் ஸ்டைல்!

தியாகராஜரின் சிகை அலங்காரம்

எம்.கே.டி.யின் சிகை அலங்காரம் மிகவும் பிரபலமடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் மன்னார்குடியைச் சேர்ந்த இவரின் ரசிகர் ஒருவர் தியாகராஜரை அடிக்கடி காணவருவதுண்டு. அப்போது தியாகராஜருக்காகவே பிரத்தியேகமான முறையில் ஒரு சீப்பை வடிவமைக்கச் சொல்லி அதனை அவரிடம் கொடுத்து தலைவாரும் படி கேட்டுக்கொண்டாராம். பின்னர் அதனை ஒரு தங்க முலாம் பூசிய மடலில் சுற்றி வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துள்ளாராம். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் ஒவ்வொரு சீப்பு கொடுத்து வந்துள்ளார். இதன் பிறகு தியாகராஜரின் சிகை அலங்காரம் ‘பாகவதர் சிகை அலங்காரம்’ – Bhagavadhar crop என அழைக்கப்பட்டுள்ளது.

என் ஒன்றை தனக்கே சொந்தமாக்கினார்!

தியாகராஜ பாகவதரின் தமிழ் மற்றும் ஆங்கில கையொப்பங்கள்

‘பாகவதர்’என்ற சொல்லுக்கு இசைப்புலவர் என்ற பொதுவான அர்த்தம் இருந்தாலும் உலக தமிழர் மத்தியில் அச்சொல், தியாகராஜ பாகவதர் என்றே அறியப்படுகிறது. திரையுலக புகழிலும் கர்நாடக இசையில் முதலிடத்தில் இருந்த எம்.கே.டி.யின் பிறப்பும்,இறப்பும் கூட முதலிடத்தில்தான் அமைந்துள்ளது. 1910ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி பிறந்த தியாகராஜர் 1959ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி மறைந்துள்ளார்.

Related Articles