குழந்தை வளர்ப்பில், பிறந்தது முதல், 5 வயது வரை இருக்கும் காலக்கட்டம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று. குழந்தை வளரும் சூழலும் அந்த குழந்தையின் நரம்பு மண்டலம் வடிவம் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், அந்த குழந்தையின் சுற்றுச்சூழலை அமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அந்த முதல் பருவத்தில் வளரும் போது அதன் மனதிற்கு கிடைக்கின்ற வடிவத்திற்கும் சூழலுக்கும் தொடர்பு உள்ளது.