4 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கையில் களைகட்டிய “வெசாக்” கொண்டாட்டம்.

கௌதம புத்தர் பிறந்த, ஞானம் அடைந்த மற்றும் பரிநிர்வாணமடைந்ததொரு தினமாகக் கருதி, உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் இந்த ”வெசாக்” தினமானது அனுட்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும், இப்பண்டிகையானது சிங்கள பௌத்த மக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் இன,மத பேதமின்றி பல இடங்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.

இலங்கையில் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இம்முறை வெசாக் பண்டிகையானது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வெசாக் தினத்தன்று தலைநகர் கொழும்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இந்தப் பதிவில் காணலாம்.

புகைப்படங்கள் : Roar Media/Nazly Ahmed

கங்காராம விகாரையின் சீமாமாலகயவிலுள்ள வெசாக் வலயத்திற்கு வருகைத் தரும் மக்கள் கூட்டம்.
வத்தளை பகுதியில் முகமூடிகளை பார்வையிடுகின்ற நபரொருவர்.
வெசாக் கூடொன்றை தொங்கவிடுவதற்காக ஒன்றுசேர்ந்துள்ள ஆண்கள். விகாரையும் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ள பஞ்சிகாவத்தை பகுதியில் பௌத்தர்களும் தமிழர்களும் அப்பகுதியை அலங்கரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
கங்காராம விகாரையின் சீமாமாலகயவிலுள்ள வெசாக் கூடுகளைப் பார்க்கப் பெருந்திரளாக வருகை தந்த மக்கள்.
வெசாக் இரவு நிகழ்வுக்கு முன்னதாக, வெசாக் கூடுகளை நேர்த்தியாக்குகின்ற நபர். இடம் – பௌத்தாலோக்க மாவத்தை.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இம்முறை வெசாக் தினமானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களில் பலர், தற்போது பொருளாதாரச் சவால்களில் சிக்குண்டு மீண்டெழமுடியாமல் திணறி வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
மாற்றுத்திறனாளி ஒருவர் விற்பனைக்காக வெசாக் கூடுகளை உருவாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இடம் – ஒருகொடவத்தை.
தன்னார்வலர்கள் தானத்துக்காக சீனி சம்பல் தயார் செய்த காட்சி. இடம் – பொரளை
கங்காராம விகாரையில் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம் தானம்.

Related Articles

Exit mobile version